Thursday 2nd of May 2024 11:52:17 AM GMT

LANGUAGE - TAMIL
கசிப்பு
வவுனியாவில் சட்டவிரோத கசிப்பு நடவடிக்கை முறியடிப்பு; இருவர் கைது!

வவுனியாவில் சட்டவிரோத கசிப்பு நடவடிக்கை முறியடிப்பு; இருவர் கைது!


வவுனியா கோவில்புதுக்குளத்தில் இன்று (25) பிற்பகல் 12 மணியளவில் சட்டவிரோத கசிப்பு தயாரிப்பதற்கு தயார் நிலையில் இருந்த வீடு முற்றுகையிடப்பட்டுள்ளதுடன் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 35000 மில்லிலீற்றர் கோடாவுடன் சந்தேக நபர் இருவரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா பொலிஸ் பிரிவிலுள்ள கோவில்புதுக்குளம் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் குறித்த வீடு முற்றுகையிடப்பட்டது.

இதன்போது கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் 35000 மில்லிலீற்றர் கோடாவினை கைப்பற்றிய பொலிஸார் சந்தேகத்தில் இருவரைக் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE